×

மணிப்பூரில் வன்முறை நடந்த 6 வாக்குசாவடிகளில் நாளை மறுவாக்குபதிவு

இம்பால்ல: மணிப்பூரில் வன்முறை நடந்த 6 வாக்குசாவடிகளில் நாளை மறுவாக்குபதிவு நடக்கிறது. இது குறித்து தேர்தல் அதிகாரிகள் கூறுகையில், மணிப்பூர் அவுட்டர் மக்களவை தொகுதியில் முதல் கட்ட தேர்தல் நடந்த போது பல இடங்களில் வன்முறை நடந்தது. இதில் சிலர் வாக்குபதிவு இயந்திரங்கள்,விவிபேட் கருவிகள் ஆகியவற்றை சேதப்படுத்தினர்.

ஒரு சில இடங்களில் வாக்குபதிவை நடத்தக்கூடாது என்று அடையாளம் தெரியாத நபர்கள் சேதப்படுத்தியதாக அதிகாரிகளுக்கு தகவல் வந்தது. இது குறித்து தேர்தல் அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், அவுட்டர் மணிப்பூரில் உள்ள 4 வாக்குசாவடிகளுக்கு நாளை மறுவாக்குபதிவு நடைபெறும் என்றும் உக்ருல்,சேனாபதி மாவட்டத்தில் தலா 1 வாக்குசாவடியிலும் நாளை மறுவாக்குபதிவு நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post மணிப்பூரில் வன்முறை நடந்த 6 வாக்குசாவடிகளில் நாளை மறுவாக்குபதிவு appeared first on Dinakaran.

Tags : Manipur ,Imballa ,Manipur Outer Lok Sabha ,Dinakaran ,
× RELATED மணிப்பூரில் நடந்த நிர்வாண ஊர்வலம்; 2...